Monday, December 2, 2019

மராத்தியர்கள் கேள்விகளும்


                                           மராத்தியர்கள்
கேள்விகளும் பதில்களும்
1.     தமிழ் நாட்டில் முதன் முதலில் வன உயிரியல்’பூங்கா யாரால் அமைக்கப்பட்டது?
A.    முதலாம் சரபோஜி  B. இரண்டாம் சரபோஜி C. ராஜராஜ சோழன் D. ராஜேந்திர சோழன்.
2.     கொரில்லா போர் முறையை நன்கு அறிந்தவர்கள் யார்?
A.    மராத்தியர்கள் B. முகலாயர்கள் C.குப்தர்கள் D. சுல்தான்கள்
3.     முகலாயர்களின் அரசுக்கு பிறகு தோன்றிய அரசு எது?
A.    குப்தர்கள் B. சுல்தான்கள் C. ராஜபுத்திரர்கள் D. மராத்தியர்கள்
4.     மராத்திய பேரரசை தோற்றுவித்தவர்?
A.    சிவாஜி B சாஜிபோன்ஸ்லே C. ஷாகு D. பாலாஜி பாஜிராவ்
5.     சிவாஜியின் பாதுகாவலர் மற்றும் குரு யார்?
A.    தாதாஜி கொண்டதேவ் B. கவிகலாஷ் C. ஜூஜிபாய்
6.     புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு?
A.    1666 B. 1656 C.1665 D 1657
7.     சிவாஜியை தக்காண புற்றுநோய் என்றும் மலை எலி என்றும் அழைத்தது யார்?
A.    முகலாயர்கள் B. மராத்தியர்கள் C.சுல்தான்கள் D. ஆப்கானியர்கள்
8.     சிவாஜியின் அரசியல் முறை எதனை வட்டங்களை கொண்டிருந்தது?
A.    3 B. 5 C. 6 D. 4
9.     சௌத் மற்றும் சர்தேஷ்முகி வரி  யார் விதித்த வரிகள்?
A.    சாம்பாஜி B. ஷாகு C. பாலாஜிபாஜிராவ் D. சிவாஜி
10.                          செளத் வரி வருமானதில் எத்தனை பங்கு விதிக்கப்பட்டது?
A.    1/5 B. 1/2 C. 1/3 D. 1/4
11.                         சர்தேஷ்முகி வரி எத்தனை பங்கு விதிக்கப்பட்டது?
A.    1/9 B. 2/1௦ C. 5/1௦ D. 1/1௦
12.                         அஷ்டபிரதான் என்பது எத்தனை பேர்கள் கொண்ட அவை?
A.    5 B. 6 C. 7 D. 8
13.                         யாருடைய அவையில் அஷ்டபிரதான் என்று அழைக்கப்பட்ட அஷ்டதிகஜங்கள் இருந்தனர்?
A.    ஷாகு B. சாம்பாஜி C. பாலாஜி பாஜிராவ் D. சிவாஜி
14.                         சிவாஜியின் அமைச்சரவையில் தலைமை நீதிபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
A.    பண்டிட்ராவ் B. வாக்கியநாவிஸ் C. அமத்தியா D. நியாய தீஷ்
15.                         சிவாஜியின் அமைச்சரவையில் முதன்மை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
A.    சச்சிவ் B. துபிர் C. மஜீம்தார் D. பந்த்பீரதன்
16.                         சிவாஜியின் ஆட்சியில் கிராமத்தலைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A.    பட்டீல்கள் B. தேஷ்முக் C. தேஷ்பாண்டே D. அமத்தியா
17.                         சிவாஜியின் பேரரசு எவ்வாறு அழைக்கப்பட்டது?
 A . சுயராஜ்ஜியம்
18.                         சிவாஜியின் மூத்த மகன் யார்?
A.    ஷாகு B. பாஜிராவ் C. சாம்பாஜி D. பாலாஜி பாஜிராவ்
19.                         சாம்பாஜி யாரால் கொல்லப்பட்டார்?
A.    அக்பர் B. ஆப்கானியர்கள் C. சுல்தான்கள் D. ஒளரங்கசீப்
  2௦. ஷாகு யாருடைய மகன்?
A.    சிவாஜி B. சாம்பாஜி C. பாஜிராவ் D. பாலாஜிபாஜிராவ்
20.                         ஷாகு என்றால் என்ன ?
21.                         ஷாகு என்ற பெயர் யாரால் வைக்கப்பட்டது?
22.                         பாலாஜி விஸ்வநாத்தை பேஷ்வாவாக நியமித்தது யார்?
A.    சிவாஜி B. ஷாகு C. சாம்பாஜி D. பாஜிராவ்
23.                         பேஷ்வா என்பதன் பொருள்?
24.                         முதல் பேஷ்வா யார்?
A.    பாஜிராவ் B. இரண்டாம் பாலாஜி பாஜிராவ் C. பாலாஜிபாஜிரவ் D. பாலாஜி விஸ்வநாத்
25.                         இரண்டாவது பேஷ்வாவா யார்?
A.    பாஜிராவ் B. இரண்டாம் பாலாஜி பாஜிராவ் C. இரண்டாவது  பாஜிராவ்
26.                         வார்னா ஒபந்தம் கையெழுத்தான வருடம்?
A.    1732 B. 1733 C. 1731 D. 1731
27.                         மராத்தியர்களின் நிதிநிர்வாக செயல்பாடுகள் எங்கு மேற்கொள்ளப்பட்டது?
A.    மகாராஷ்டிரா B. குஜராத் C. டெல்லி D. பூனே
28.                         மராத்திய பேரரசு எங்கு யாரால் முடிவு அடைந்தது.?
A.    பானிபட், அகமதுஷா அப்தாலி
29.                         மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?
A.    1751 B. 1761 C. 1771 D. 1781
3௦.  கடைசி பேஷ்வா யார்?
A.    சவாய்மாதவ் B. நாராயண ராவ் C. இரண்டாம் மாதவராவ் D. இரண்டாம் பாஜிராவ்
31.                         சால்பை உடன்படிக்கை எந்த போரில் செய்யப்பட்டது?
A.    1 மராத்திய போர் B. II மராத்திய போர் C. III மராத்திய போர்
32.                         சால்பை உடன்படிக்கை எந்த ஆண்டு மேற்க்கொள்ளப்பட்டது?
A.    1782  B. 1783 C. 1780 D. 1781
33.                         இரண்டாவது மராத்திய போரின் போது ஆங்கிலேய ஆளுநராக இருந்தவர் யார்?
A.    ரிப்பன் பிரபு B. ஸ்மித் C. மவுன்ட் ஸ்டுவர்ட்                D. வெல்லெஸ்லி பிரபு
34.                         இரண்டாவது மராத்திய போரில் கையெழுத்தான ஒப்பந்தம்?
A.    புரந்தர்(1665) B. சால்பை(1782) C. பேசின்(1802) D. வார்னர்(1731)
35.                          மூன்றாவது மராத்திய போரில் போடப்பட்ட ஒப்பந்தம்?
புரந்தர்(1665) B. சால்பை(1782) C. பேசின்(1802) D. பூனா 1817
36.                         மகர்கள் என்றால்?
A.    காலாட்படை B. குதிரைப்படை C. காவல் துறை 
D. இராணுவம்
  37. இவர்களின் ஆட்சியில் எந்த படை முதன்மையானதாக இருந்தது?
 A. காலாட்படை B. குதிரைப்படை C. காவல் துறை 
D. இராணுவம்
39. கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் ஆகிய இடங்களில்  கடற்ப்படை தளங்களை கட்டியது யார்?
A. ஷாகு B. பாஜிராவ் C. சிவாஜி D. பாலாஜி விஸ்வநாதன்
40. தஞ்சையின் முதல் மராத்திய அரசர் யார்?
A. சந்தாஜி B. சிவாஜி C. பாலாஜிராவ் D. வெங்கேஜி
41. போன்ஸ்லே சாம்ராஜ்யத்தின் கடைசி மராத்திய அரசர் யார்?
  A. முதலாம் சரபோஜி B.II சரபோஜி C. வெங்கேஜி D.பாலாஜிபாஜிராவ்
42. மாராத்தி மற்றும் சம்ஸ்கிருத மொழிகளின் முதல் அச்சகம் யாரால் அமைக்கப்பட்டது?
A. I சரபோஜி B. II சரபோஜி C. வெங்கேஜி D. சந்தாஜி
43. இரண்டாம் சரபோஜி காலத்தில் வாழ்ந்த சமயபரப்பாலரான கல்வியில் முன்நோடி அறிஞர் யார்?
A. ப்ரெட்ரிக் ஸ்வார்ட்ஸ் B. சி.எஸ். ஜான்
44. சர் தாமஸ் மன்றோ எந்த ஆண்டு தொடக்ககல்வி திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்தார்?
A. 1820 B.1819 C. 1821 D. 1822
45. உயர்கல்வி நிறுவனங்கள் மற்ற இந்திய அரசர்கள் நடத்திய போதிலும் தொடக்க கல்வியை தொடங்கியது யார்?
46. தன்வந்திரி மஹால் கட்டியது யார்?
A. II சரபோஜி B. முதலாம் சரபோஜி C.சந்தாஜி
47. குமாரசம்பவ சம்பு, தேவேந்திர குறவஞ்சி , முத்ர ராக்சஸ்யா ஆகிய நூல்களை எழுதியது யார்?
48. கர்நாடக இசையில் மேற்கத்திய இசை கருவிகளான கிளாரினட், வயலின் ஆகிய கருவிகளை யார் அறிமுகம் செய்தது?
49. II சரபோஜியின் இறுதி ஊர்வலத்தில் பங்குபெற்ற சமயபரப்பாளர் யார்?
A. ப்ரெட்ரிக ஸ்வார்ட்ஸ் B. சி.எஸ். ஜான் C. பிஷப் ஹீப்பர்
5௦. “முடிசூடிய பல தலைவர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் தவிர எவரிடமும் அது இளவரசத் தன்மையோடு அலங்கரித்ததில்லை” இந்த வரிகள் யாரை பற்றி யார் கூறியது?

No comments:

Post a Comment